குஜராத்துக்கு சிறப்பு படையை அனுப்ப பஞ்சாப் மறுப்பு
அகமதாபாத்:
குஜராத்தில் வன்முறையை அடக்க பஞ்சாப் போலீசாரை அனுப்ப மாட்டோம் என அம் மாநில அரசு கூறிவிட்டது.
குஜராத் முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பஞ்சாப் போலீஸ் டி.ஜி.பி. கேபிஎஸ் கில் தான்ஒரு பட்டாலியன் பஞ்சாப் போலீஸ் சிறப்புப் படையை அனுப்புமாறு கோரியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியையும் சந்தித்துப் பேசினார்.
முதலில் படையை அனுப்ப பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டது. இதையடுத்து கில் நம்பிக்கையுடன் குஜராத்திரும்பினார். ஆனால், இன்று திடீரென தனது நிலையை பஞ்சாப் அரசு மாற்றிக் கொண்டது.
பஞ்சாபில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. குஜராத்தில் அம் மாநில பா.ஜ.க. அரசே வன்முறையைத் திட்டமிட்டு நடத்திவருவதை காங்கிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்த குஜராத் அரசு தவறிவிட்டதாகக் கூறிவருகிறது.
இந் நிலையில் தனது ஆட்சியில் உள்ள படையை அனுப்பியும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் இதுயாராலும் கட்டுப்படுத்தப்படாத வன்முறை என்று கூறப்படும் என்பதால் படையை அனுப்ப வேண்டாம் என்றுகாங்கிரஸ் மேலிடம் தடுத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
படையை அனுப்பினாலும் அதை சுதந்திரமாக செயல்பட குஜராத் அரசு விடாது என்று காங்கிரஸ் கருதுவதாகத்தெரிகிறது. இதனால், தனது மாநில போலீஸ் படையின் பெயரையும் சேர்த்துக் கெடுத்துக் கொள்ள காங்கிரஸ்விரும்பவில்லை.
இந் நிலையில் பஞ்சாப் போலீஸ் படையை கில் கேட்டாரா? அது பற்றி மத்திய அரசுக்கு ஏதும் தெரியாது என்றுகூறியுள்ளார் மத்திய உள்துறை இணையமைச்சரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான ஐ.டி.சாமி.
குஜராத் விவகாரத்தில் பா.ஜ.க. என்ன செய்கிறது என்பது அந்த சாமிக்கே வெளிச்சம்.