ஜப்பானில் தமிழக சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசும் ஜப்பானில் உள்ள சைபர் க்ரூ கார்ப்பரேஷனும், தமிழகத்தில் உள்ள சாஃப்ட்வேர், ஹார்ட்வேர் இன்ஜினியர்களுக்குவேலை வாய்ப்பு அளிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

மாநில வேலை வாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநரும் அயல்நாட்டு வேலை வாய்ப்புத் துறை நிர்வாக இயக்குநருமான( Tamilnadu overseas manpower corporation) கே. செல்லமுத்துவும் , ஜப்பான் நிறுவன இயக்குநர் டெய்ஜி யோகயாமாவும்இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளோரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் க்ரு கார்பரேஷனுக்குஅனுப்பி வைக்கப்படும். அந்த பட்டியலில் இருந்து போதிய தகுதியுடைய டிப்ளமோ, பட்டதாரிகளை க்ரு கார்பரேஷன் தேர்வுசெய்யும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, க்ரு கார்பரேஷன், தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தும். அந்த தேர்வு முடிவுகள் உடனடியாகஅறிவிக்கப்படும். சம்பளம், பணி போன்ற விதிமுறைகளை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமும் ஜப்பான் நிறுவனமும்கலந்தாலோசித்து முடிவு செய்யும்.

இதற்கான வேலைகள் ஜூலை மாதத்துக்குள் தொடங்கப்பட உள்ளது. தற்போது 2000 பேர் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர்இன்ஜினியர்கள் இந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இதுவரை 18,000 பேர் பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புக் கோரி பதிவுசெய்துள்ளனர். இவர்களில் 5,700 பேர் வேலை வாய்ப்பு பெற்று மலேசியா, சிங்கப்பூர், குவைத், அமெரிக்கா, அரேபியா போன்றபல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+