தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ காதலர்கள்
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் பிளஸ் டூ படித்து வந்த மாணவனும், மாணவியும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டனர்.
தஞ்சை சாமியாப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் பிளஸ் டூ படித்து வந்தார். முத்திரப்ப சாவடி என்ற பகுதியைச்சேர்ந்தவர் கலைமதி. இவரும் பிளஸ் டூ படித்து வந்தார். இருவருக்கும் வயது 17.
இருவரும் பிளஸ் டூ தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
பள்ளியில் படித்து வந்தபோது இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 4 மாதங்களாக இந்தப் பள்ளிக் கூட காதல் நடந்துவந்துள்ளது. இவர்களது காதல் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. படிக்கும் போதே காதலா என்று இருவரையும்பெற்றோர் கண்டித்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது கண்டு அதிர்ந்து போன இந்த இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டை விட்டு வெளியேறி கலைமதி, காதலன் செல்வத்தின் வீட்டுக்குச் சென்றார்.
அவரை ரகசியமாக சந்தித்து அழுதுள்ளார். அவரைத் தேற்றிய செல்வம், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.அதை ஏற்றுக் கொண்ட கலைமதி, செல்வத்தின் வீட்டிற்குள் புகுந்தார்.
அங்கு இருவரும் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தனர்.












Click it and Unblock the Notifications