நாளை சென்னை to
சென்னை:
சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை-பெங்களூர் இடையே தினந்தோறும் 5 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறனர். தினமும் நூற்றுக்கணக்கானதனியார் மற்றும் இரு மாநில அரசு பஸ்களும் இந்த இரு நகர்கள் இடையே இயங்கி வருகின்றன.
ஆனாலும் ரயில்களிலும் பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறை காரணமாக கூட்டம்பலமடங்கு அதிகரித்துவிட்டது. சென்னை வெயிலில் இருந்து தப்பி பெங்களூருக்கு ஓடி வருபவர்களின்எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
இதையடுத்து தென்னக ரயில்வே நாளை (10 ம் தேதி) சென்னை-பெங்களூர் இடையே சிறப்பு ரயிலை இயக்கமுடிவு செய்துள்ளது.
இந்த ரயில் நாளை இரவு 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுநாள் காலை(11ம் தேதி) 4 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்கார்பேட், கண்டோன்மென்ட் வழியாக பெங்களூர்ரயில் நிலையத்தைச் சென்றடையும்.