இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தப்பியோட்டம்
ராமேஸ்வரம்:
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு அழைத்து வரப்பட்ட நான்கு மீனவர்களும் தப்பியோடிவிட்டனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இருளாண்டி, வேலுச்சாமி,மனோகரன், ஜெகந்நாதன் ஆகியோர் 3 மாதங்களுக்கு முன் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்தது.
பிறகு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.
தமிழக மற்றும் மத்திய அரசுகளின் தீவிர முயற்சிக்குப் பிறகு அவர்களை இலங்கை அரசு விடுவித்தது. இலங்கையிலிருந்துவிமானம் மூலம் நான்கு மீனவர்களும் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் மீன்வளத்துறை இயக்குனர் இவர்களை வரவேற்றார். பின்னர் பஸ் மூலம் இவர்களைராமநாதபுரத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
கேணிக்கரை பகுதியில் ஒரு ஸ்பீட் பிரேக்கருக்காக பஸ் மெதுவாக சென்றபோது, நான்கு மீனவர்களும் திடீரென்று வெளியேகுதித்துத் தப்பி விட்டனர். இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எதற்காக தப்பியோடினர் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications