நாங்க கண்ணகி சிலையை பார்த்தோமே!
சென்னை:
சென்னை மெரீன கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அருங்காட்சியகத்தில் வைத்துப் பூட்டிவிட்டு யார் பார்வையிலும்படாமல் வைத்திருந்த தமிழக அரசு இன்று அதை திடீரென நிருபர்களுக்குக் காட்டியது.
நேற்று தான் யார் வந்தாலும் காட்டத் தயார் என்று கல்வியமைச்சர் தம்பிதுரை கூறினார். ஆனால், அது தொடர்பாக அனுமதிகேட்கச் சென்ற ஒரு பத்திரிக்கையை இழுத்தடித்தார் தம்பிதுரை. இதனால், சிலையை ஏதோ செய்துவிட்டார்கள் என்ற சந்தேகம்வலுத்தது.
இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இன்று திடீரென நிருபர்களுக்கு அழைப்பு விடுத்தார்தம்பிதுரை. என்னவோ ஏதோ என்று நிருபர்கள் அவரிடம் ஓடினர். வந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு எழும்பூர் எழும்பூர்அருங்காட்சியகத்த்குச் சென்றார் தம்பிதுரை.
அங்கே ஒரு அறையில் சிலை வைக்கப்பட்டிருந்ததைத் காட்டினாரர். மெரீன கடற்கரையில் கம்பீரமாக நின்றிருந்த அந்தச் சிலைபடுக்க வைக்கப்பட்டிருந்தது. பொழிவிழந்து போய் காணப்பட்டது.
கற்புக்கரசி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் 1967ஆம் ஆண்டு திமுக அரசால் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை மீது 5மாதங்களுக்கு முன் திடீரென்று ஒரு லாரி மோதியது. இதில் சிலையின் பீடம் சேதமடைந்ததாக அரசு கூறியது.
அடுத்த சில தினங்களில் சிலை காணாமல் போனது. சிலை எங்கே என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்த பின்னர் தான் அதுஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது.
பீடம் சேதமடைந்ததாலும் அது போக்குவரத்துக்கு இடைஞ்சலான இடத்தில் இருந்ததாலும் அகற்றியதாக அப்போதைய முதல்வர்பன்னீர் விளக்கம் தந்தார். ஆனால், ஜெயலலிதா முதல்வராக வேண்டுமென்றால் சிலையை அகற்ற வேண்டும் என ஜோதிடர்சொன்னதாகவும் தகவல்கள் வந்தன.
ஆனால், சிலையை மட்டும் இத்தனை நாட்களாக அரசு காட்ட மறுத்து வந்தது. இதனால் சிலையை உடைத்து வீசிவிட்டார்கள்என்று வதந்தி பரவியது. இப்போது அந்தச் சிலையை மீண்டும் நிறுவுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கைத் தொடர்ந்தது திமுக.
சிலையை மீண்டும் நிறுவ 3 இடங்களை தேர்வு செய்து நீதிமன்றத்திடம் கொடுத்துள்ளது அரசு என்று நேற்று தான்பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் கூறினார்.
சிலை விவகாரம் தினமும் பெரிதாகிக் கொண்டே போவதால் இன்று தடாலடியாக நிருபர்களை அழைத்துப் போய் சிலையைக்காட்டினார் தம்பிதுரை.
சிலை சேதம் ஏதும் இன்றி அப்படியே இருந்தது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications