நாங்க கண்ணகி சிலையை பார்த்தோமே!
சென்னை:
சென்னை மெரீன கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அருங்காட்சியகத்தில் வைத்துப் பூட்டிவிட்டு யார் பார்வையிலும்படாமல் வைத்திருந்த தமிழக அரசு இன்று அதை திடீரென நிருபர்களுக்குக் காட்டியது.
நேற்று தான் யார் வந்தாலும் காட்டத் தயார் என்று கல்வியமைச்சர் தம்பிதுரை கூறினார். ஆனால், அது தொடர்பாக அனுமதிகேட்கச் சென்ற ஒரு பத்திரிக்கையை இழுத்தடித்தார் தம்பிதுரை. இதனால், சிலையை ஏதோ செய்துவிட்டார்கள் என்ற சந்தேகம்வலுத்தது.
இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இன்று திடீரென நிருபர்களுக்கு அழைப்பு விடுத்தார்தம்பிதுரை. என்னவோ ஏதோ என்று நிருபர்கள் அவரிடம் ஓடினர். வந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு எழும்பூர் எழும்பூர்அருங்காட்சியகத்த்குச் சென்றார் தம்பிதுரை.
அங்கே ஒரு அறையில் சிலை வைக்கப்பட்டிருந்ததைத் காட்டினாரர். மெரீன கடற்கரையில் கம்பீரமாக நின்றிருந்த அந்தச் சிலைபடுக்க வைக்கப்பட்டிருந்தது. பொழிவிழந்து போய் காணப்பட்டது.
கற்புக்கரசி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் 1967ஆம் ஆண்டு திமுக அரசால் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை மீது 5மாதங்களுக்கு முன் திடீரென்று ஒரு லாரி மோதியது. இதில் சிலையின் பீடம் சேதமடைந்ததாக அரசு கூறியது.
அடுத்த சில தினங்களில் சிலை காணாமல் போனது. சிலை எங்கே என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்த பின்னர் தான் அதுஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது.
பீடம் சேதமடைந்ததாலும் அது போக்குவரத்துக்கு இடைஞ்சலான இடத்தில் இருந்ததாலும் அகற்றியதாக அப்போதைய முதல்வர்பன்னீர் விளக்கம் தந்தார். ஆனால், ஜெயலலிதா முதல்வராக வேண்டுமென்றால் சிலையை அகற்ற வேண்டும் என ஜோதிடர்சொன்னதாகவும் தகவல்கள் வந்தன.
ஆனால், சிலையை மட்டும் இத்தனை நாட்களாக அரசு காட்ட மறுத்து வந்தது. இதனால் சிலையை உடைத்து வீசிவிட்டார்கள்என்று வதந்தி பரவியது. இப்போது அந்தச் சிலையை மீண்டும் நிறுவுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கைத் தொடர்ந்தது திமுக.
சிலையை மீண்டும் நிறுவ 3 இடங்களை தேர்வு செய்து நீதிமன்றத்திடம் கொடுத்துள்ளது அரசு என்று நேற்று தான்பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் கூறினார்.
சிலை விவகாரம் தினமும் பெரிதாகிக் கொண்டே போவதால் இன்று தடாலடியாக நிருபர்களை அழைத்துப் போய் சிலையைக்காட்டினார் தம்பிதுரை.
சிலை சேதம் ஏதும் இன்றி அப்படியே இருந்தது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications