புலிகள் மீது சந்திரிகா மீண்டும் பாய்ச்சல்
நியூயார்க்:
விடுதலைப்புலிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்த விரும்பவில்லை, சில உடனடி சலுகைகளை பெற்றுக்கொள்வதற்குத் தான் ஆர்வம் காட்டுகின்றனர் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இலங்கை அமைதிப் பேச்சு வார்த்தை நடக்கும் விதம் கவலை தரும் விதத்தில் உள்ளது. அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைப்புவிடுக்கும் முன்னரே தங்கள் அமைப்பின் மேல் உள்ள தடைகளை தளர்த்த வேண்டும், தங்களை சுதந்திரமாக நடமாட விடவேண்டும், தமிழ் மக்கள் வாழுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அரசாங்க கட்டிடங்களில் நிறுத்தப்பட்டுள்ள போலீஸ்படையை வாபஸ் பெற வேண்டும் என்று பாதுகாப்பை தளர்த்த வேண்டும் என்று புலிகள் வற்புறுத்துகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசுவதாக இருந்தால் அவர்களின் மீதான தடையை தற்காலிகமாகதளர்த்துவதைப் பற்றி யோசிக்கலாம்.
நேபாள மாவோயிஸ்டுகளுக்கு விடுதலைப் புலிகள் பயிற்சி தந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆதாரங்களை சேகரித்துவருகிறோம்.
இலங்கையில் 95 சதவீத தமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் தான் கொன்று குவித்துள்ளனர். அப்படி இருக்கும் போதுஅனைத்து தமிழர்களுக்காகவும் அவர்கள் எப்படி பேச முடியும். மேலும் அனைத்து தமிழர்களும் தனி தேசம் வேண்டும் என்றகோரிக்கையை விரும்பவில்லை.
பிப்ரவரி 22ம் தேதி முதல் தாய்லாந்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிரந்தர தீர்வுகாண விரும்பவில்லை. அவர்கள் சில சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். முக்கிய விஷயங்களை பேச அவர்கள் வந்த பின்னரேசலுகைகள் பற்றி யோசிக்க முடியும். மேலும் அவர்களது தனி நாடு கோரிக்கையை தவிர மற்றவற்றை பற்றி அவர்கள் பேச முன்வரவேண்டும்.
இந்தியா ஆதரிக்கிறது:
அமைதிப் பேச்சு வார்த்தையை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால் இந்தியா, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும்இடையில் மத்தியஸ்தமாக இருக்க வேண்டும் நானும் கேட்கவில்லை; டெல்லியும் அதை விரும்பவில்லை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி, புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரியிருந்தது. ஆனால் அப்போதுஅவர்களின் இருப்பிடம் கண்டறியப்படவில்லை.
ஆனால் இப்போதைய அரசு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரவில்லை. அவ்வாறு இந்தியாமீண்டும் கோரிக்கை விடுத்தால், இலங்கை அரசு என்ன செய்யும்? என்று சந்திரிகா கேள்விக்கணை எழுப்பினார்.
அவரது பேச்சு அமைதிப் பேச்சுவார்த்தையையே அவர் விரும்பவில்லை என்பதைத் தான் உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications