கடனில் சிக்கித் தவிக்கும் தமிழகம்
சென்னை:
அதிகப்படியான கடன்கள் வாங்கியதால் தமிழகத்தின் நிதி நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக இந்திய தலைமைஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிய தமிழகத்தின் நிதி நிலை குறித்து டெல்லியில் ஆடிட்டர் ஜெனரல்வெளியிட்டுள்ள அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்:
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு தனது தகுதியையும் மீறி மிக அதிக அளவில் பல்வேறு அமைப்புகளிடம்இருந்து கடன் வாங்கியுள்ளது. இதனால் வட்டியாக மட்டும் கோடிக்கணக்கான பணத்தை செலுத்தி வருகிறது. இதனகாரணமாக நிதி நிலை படுமோசமடைந்துள்ளது.
அரசுக்கு போதிய வருவாயும் இல்லை. இதனால் வருவாய்க்கும் செலவுகளுக்கும் இடையிலான வித்தியாசம்மேலும் அதிகரித்துவிட்டது.
கடந்த ஆண்டில் அரசின் வருவாய் 13.5 சதவீதம் தான் அதிகரித்தது. ஆனால், செலவு 18.1 சதவீதம் அதிகரித்தது.இதற்கு முக்கியக் காரணம் கடனை அடைக்க அரசு திருப்பிச் செலுத்தி வரும் அதிகப்படியான தொகை தான்.
2000-2001ம் ஆண்டு மட்டும் அரசுக்கு 3,436 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications