நெடுமாறன் மீது நடவடிக்கையா? ஜெ. விளக்கம்
சென்னை:
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எரிப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே தான் நெடுமாறன் உள்ளிட்டவர்கள்கைது செய்யப்பட்டனர். ஆனால் நெடுமாறன் தீர்மான நகலை எரிக்காத காரணத்தால் அவர் மட்டும் விடுதலை செய்ய்பட்டார்என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தக் கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதீர்மானத்தின் நகலை எரித்துப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்அறிவித்திருந்தார். ஆனால் திடீரென அவரை அதிகாலையில் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனால் எரிப்புப்போராட்டத்தில் அவர் கலந்து கொள்ள முடிவில்லை.
மாலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், எரிப்புப் போராட்டம் நடத்திய மற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதா இது தொடர்பாக ஒழுங்கு பிரச்சினையைக் கிளப்பினார். அப்போது, சட்டசபையில்நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட நகலைக் கொளுத்தியதற்காக முன்பு திமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் சமீபத்தில் இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை எரித்த சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது நடவடிக்கை இல்லையா? என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, நெடுமாறன் மற்றும் சிலர் தீர்மான நகலை எரிக்கப் போவதாக அறிவித்து விட்டு ஒருஇடத்தில் கூடினர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதில் நெடுமாறன் தீர்மான நகலை எரிக்கவில்லைஎன்பதால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும் நெடுமாறன் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் நகலை எரித்துள்ளனர். அவர்கள் இன்னும் காவலில்தான் இருக்கிறார்கள்.அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications