தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கக் கோரி தீர்மானம்: ஜெ. திட்டம்
சென்னை:
தமிழ் உள்பட 18 தேசிய மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று கோரி தீர்மானம்கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்தார்.
சட்டமன்றத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே. மணிகோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து ஜெயலலிதா பேசுகையில், நாங்கள் மத்திய அரசின் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தபோது தேசியநிர்வாக செயல் திட்டம் வகுப்பதற்காக கூட்டம் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.
அப்போது செயல் திட்டத்தில் 18 மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையைசேர்க்க வைத்தேன். இது குறித்து ஆராய குழு அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், என்ன ஆனது என்றுதெரியவில்லை. குழுவை அமைக்கவில்லை.
இப்போது மத்திய அரசின் கூட்டணியில் இருப்பது உங்கள் கட்சி தான் (பா.ம.க.). நீங்கள் அங்கே தான் இதைவலியுறுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு இங்கே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிறீர்கள். உங்கள்கடமையை மறக்கக் கூடாது.
அதே நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேறும்.
அத்தோடு தமிழ் மொழியை செம்மொழி ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications