சென்னை வந்த கொல்கத்தா ரயிலில் முதியவர் திடீர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெங்களூர் யஷ்வந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை வழியாக ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திருத்தணிவந்தபோது, அதில் 65 வயது முதியவர் திடீர் என்று மரணம் அடைந்தார்.
திருத்திணி ரயில் அருகே இந்த ரயில் வந்தபோது அதில் பயணம் செய்து வந்த மஜூம்தார் என்ற பயணி திடீரென்று மயங்கிவிழுந்தர். உடனடியாக ரயிலில் இருந்த டாக்டர் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
பெங்களூரில் உள்ள தனது மகளைப் பார்த்து விட்டு அவர் ஹவுரா திரும்பிக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications