For Daily Alerts
Just In
இடைத் தேர்தலுக்கு தயாராகிறது வாணியம்பாடி
வாணியம்பாடி:
இடைத் தேர்தலை சந்திக்க வாணியம்பாடி தொகுதி தயாராகி வருகிறது.
இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளன. நகர்ப் பகுதியில் முஸ்லீம் வாக்காளர்களும், கிராமப் பகுதியில்பிற மத வாக்காளர்களும் அதிக அளவில் உள்ளனர்.
மொத்தம் 2,02,784 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 240 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.ஆம்பூர் பகுதியில்தான் அதிக அளவாக 72 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
வாணியம்பாடி நகரில் மட்டும் 67 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் 101 வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட உள்ளன.
திமுக வேட்பாளர் நாகூர் ஹனீபா வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் வேட்பாளராக பெயர்அறிவிக்கப்பட்டவுடனேயே தனது பிரசாரத்தை அவர் துவக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, May 10, 2002, 5:30 [IST]