குஜராத் போலீஸ் அதிகாரிகள்- முஸ்லீம்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட 900 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மைமக்களின் நம்பிக்கையை முழு அளவில் இழந்து போய் நிற்கிறது குஜராத் போலீஸ்.

இதனால் அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சிகளில் உயர் போலீஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளார்அம் மாநில முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.எஸ். கில்.

இதைத் தொடர்ந்து சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளனர்உயர் போலீஸ் அதிகாரிகள்.

வன்முறையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அகமதாபாத் நகரின் ஜூகாபுரா பகுதிக்கு சிறப்பு ஐ.ஜி.பி.பி.பாண்டே தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று சென்றனர். இந்தப் பகுதியில் மூன்றரை லட்சம்முஸ்லீம்கள் வசித்து வந்தனர்.

தொடர்ந்து சிறுபான்மையினர் கொல்லப்பட்டு வருவதால் பாதி பேர் ஊரைவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடிவிட்டனர்.

இந்தப் பகுதியின் மூத்த முஸ்லீம் தலைவர்களை பாண்டே தலைமையிலான போலீஸ் குழு சந்தித்துப் பேசியது.

இடம்பெயர்ந்து சென்றுவிட்ட முஸ்லீம்கள் இந்தப் பகுதிக்குத் திரும்பியவுடன் மிகப் பெரும் அளவில் பதில்தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம் போலீசார் மத்தியில் இருந்தது.

இதனால் தான் இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அப் பகுதியினருடன் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்நிருபர்களிடம் பேசிய போலீசார், அந்தப் பகுதி முஸ்லீம் பெரியவர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொண்டுவருகின்றனர். நிச்சயமாக பதில் கலவரத்தில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் உறுதிமொழி தந்தனர்.

கடும் கோபத்தில் உள்ள வாலிபர்களை அடக்கி வைப்பதாகவும் உறுதிமொழி தந்தனர். கலவரம், வன்முறையில்ஈடுபடும் தங்கள் சமூகத்தினரை தண்டிக்கவும் முன் வந்துள்ளனர். இந்த நிலையிலும் இந்த சமூகத் தலைவர்களின்பொறுப்புணர்வு மிகுந்த நம்பிக்கை தருகிறது என்றனர்.

கலவரக்காரக்களுக்கு போலீசாரே ஆதரவாக நடந்து கொண்டதாகவும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்குஉடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் பெரும் நலன் பயக்கும்என்று கருதப்படுகிறது.

கடந்த 2 மாதங்களில் போலீஸ் தரப்பில் பல தவறுகள் நடந்தன என்பதை அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.

முஸ்லீம்கள் தொடர்பாக மாநில அரசின் செயல்களிலும் போலீசாரின் பார்வையிலும் இப்போது நல்ல மாற்றம்ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது என்கிறார் ஜூகாபுரா பகுதியின் பஞ்சாயத்துத் தலைவரான ஹாஜிபாய்.

இது போன்ற போலீஸ்-சிறுபான்மையினர் சந்திப்பு மாநிலம் முழுவதும் நடக்க ஆரம்பித்துள்ளது. கில்புண்னியத்தில் குஜராத் போலீசார் மாறி வருகின்றனர். விரைவில் அமைதி திரும்பினால் தேசத்துக்கு நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+