Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலை கும்பாபிஷேகத்தைக் குலைக்க பயங்கர சதி: 20 மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது தீவிரவாதிகள் மனிதவெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவினருக்கு திடுக்கிடும் தகவல் வந்துசேர்ந்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேம் நடைபெறவுள்ளது. இதில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டஆட்சித் தலைவர் தலைமையில் உயர் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பேசிய உளவுத் துறை அதிகாரிகள், கும்பாபிஷேகத்தின்போது பாகிஸ்தான் மற்றும்ஆப்கானிஸ்தான் ஆதரவு தீவரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து பெரும் தாக்குதல் நடத்தத்திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.

20 முதல் 25 மனித வெடிகுண்டுகள் வரை திருவண்ணாமலைக்கு வரவுள்ளதாகவும் அவர்கள் திடுக்கிடும்தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய மாவட்ட போலீசாருக்கு ஆட்சியர்ஆணையிட்டார்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசாரை திருவண்ணாமலையில் குவிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து திருவண்ணாமலை தவிர சுற்றியுள்ள நகரங்களில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள், ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் காவல்துறை கண்காண்ப்பு சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

காரில் கிரிவலம் வர ஜெ. திட்டம்:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர்ஜெயலலிதா காரில் அமர்ந்தவாரே கிரிவலம் வரத் திட்டமிட்டுள்ளார்.

இந்தக் கோவில் அமைந்துள்ள குன்றை நடந்தே ஒருமுறை சுற்றி வருவது தான் கிரிவலம் என்றுஅழைக்கப்படுகிறது. இது பல கிலோமீட்டர் தூரம் கொண்டது. ஆனால், கிரிவலம் செய்வது மிகுந்த நலன்களைத்தரும் என்பது நம்பிக்கை.

இதனால் இங்கு வரும் பக்தர்கள் தவறாது கிரிவலம் செய்வது வழக்கம்.

கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பே திருவண்ணாமலை வரும் ஜெயலலிதா பெளர்ணமிதினமான 25ம் தேதி கார் மூலம் கிரிவலம் வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மூட்டு வலி பிரச்சனை காரணமாக ஜெயலலிதாவால் தொடர்ந்து நீண்ட தூரம் நடக்க இயலாது என்பதாலும் அவரதுபாதுகாப்புக் கருதியும் கார் மூலமே கிரிவலம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகதக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+