திருவண்ணாமலை கும்பாபிஷேகத்தைக் குலைக்க பயங்கர சதி: 20 மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்
சென்னை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது தீவிரவாதிகள் மனிதவெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவினருக்கு திடுக்கிடும் தகவல் வந்துசேர்ந்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேம் நடைபெறவுள்ளது. இதில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டஆட்சித் தலைவர் தலைமையில் உயர் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய உளவுத் துறை அதிகாரிகள், கும்பாபிஷேகத்தின்போது பாகிஸ்தான் மற்றும்ஆப்கானிஸ்தான் ஆதரவு தீவரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து பெரும் தாக்குதல் நடத்தத்திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.
20 முதல் 25 மனித வெடிகுண்டுகள் வரை திருவண்ணாமலைக்கு வரவுள்ளதாகவும் அவர்கள் திடுக்கிடும்தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய மாவட்ட போலீசாருக்கு ஆட்சியர்ஆணையிட்டார்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசாரை திருவண்ணாமலையில் குவிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை தவிர சுற்றியுள்ள நகரங்களில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள், ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் காவல்துறை கண்காண்ப்பு சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
காரில் கிரிவலம் வர ஜெ. திட்டம்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர்ஜெயலலிதா காரில் அமர்ந்தவாரே கிரிவலம் வரத் திட்டமிட்டுள்ளார்.
இந்தக் கோவில் அமைந்துள்ள குன்றை நடந்தே ஒருமுறை சுற்றி வருவது தான் கிரிவலம் என்றுஅழைக்கப்படுகிறது. இது பல கிலோமீட்டர் தூரம் கொண்டது. ஆனால், கிரிவலம் செய்வது மிகுந்த நலன்களைத்தரும் என்பது நம்பிக்கை.
இதனால் இங்கு வரும் பக்தர்கள் தவறாது கிரிவலம் செய்வது வழக்கம்.
கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பே திருவண்ணாமலை வரும் ஜெயலலிதா பெளர்ணமிதினமான 25ம் தேதி கார் மூலம் கிரிவலம் வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மூட்டு வலி பிரச்சனை காரணமாக ஜெயலலிதாவால் தொடர்ந்து நீண்ட தூரம் நடக்க இயலாது என்பதாலும் அவரதுபாதுகாப்புக் கருதியும் கார் மூலமே கிரிவலம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகதக் கூறப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications