புலிகள் மீதான தடை நீடிக்க வேண்டும்: வாஜ்பாய்க்கு வாழப்பாடி தந்தி
சென்னை:
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசின் மூத்ததலைவர்களில் ஒருவரான வாழப்பாடி ராமமூர்த்தி இன்று வாஜ்பாய்க்கு தந்தி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அந்தத் தந்தியில் வாழப்பாடி கூறியுள்ளதாவது:
கடந்த 1992ம் ஆண்டு மே 14ம் தேதி புலிகள் மீது இந்தியா தடை விதித்தது.
நான்கு முறை நீட்டிக்கப்பட்ட இந்தத் தடை இன்றுடன் முடிவடைகிறது.
புலிகள் இயக்கம் இன்னும் சட்டத்தை மீறியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே இந்தியாவில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த இயக்கத்தின் மீதான தடையை நீட்டிக்க வேண்டும்என்று அந்தத் தந்தியில் வாழப்பாடி வலியுறுத்தியுள்ளார்.
புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்றும் இவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைஇந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தீர்மானம்கொண்டுவரப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.