நக்கீரன் நிருபரை போலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் நக்கீரன் நிருபரான சிவசுப்பிரமணியத்தைபோலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வெள்ளித் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் நடந்த தாக்குதல் மற்றும் ஆயுதங்கள் கடத்தியது ஆகியவைதொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம், பின்னர் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம்தொடர்பாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் மேலும் சில தகவல்களை அறிவதற்காக, அவரை 15 நாள் போலீஸ் காவலில்வைக்க உத்தரவிடும்படி தாளவாடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்தநீதிபதி பாக்கியராஜ் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நக்கீரன் நிருபரிடம் போலீசார் 2 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தலாம். அதன்படி வரும் 15 மற்றும் 16 ஆகியதேதிகளில் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் உள்ள அறையில்வைத்து விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையின்போது வக்கீல்கள் யாரும் உடன் இருக்கக்கூடாது. நிருபருக்கு தேவையான நீர், தேனீர்போன்றவற்றை போலீசார் வழங்க வேண்டும்.
பின்னர் 16ம் தேதி மாலை விசாரணை முடிந்ததும், சிறைக்கு பாதுகாப்புடன் கூட்டிச் செல்ல மாஜிஸ்திரேட்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications