For Daily Alerts
Just In
நுழைவுத் தேர்வு முடிவுகள்: நாளை வெளியீடு
சென்னை:
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்நாளை வெளியிடப்படவுள்ளன.
தமிழகம் முழுவதிலும் கடந்த ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவியர் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர்.
மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதையடுத்து, இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் நாளைவெளியிடப்படவுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக இந்த நுழைவுத் தேர்வுக்காகத்தான் ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள்வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 1 லட்சம் மாணவர்கள் இந்த ஆன்லைன் வசதி மூலமாகவேவிண்ணப்பங்களைப் பெற்றனர்.
Comments
Story first published: Tuesday, May 14, 2002, 5:30 [IST]