ஆரணி கோவில் சிறப்பு பூஜையுடன் பிரச்சாரம் தொடங்குகிறார் ஜெ.
ஆரணி:
ஆரணியில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வரும் 17ம் தேதி சிறப்பு பூஜை செய்யும் தமிழக முதல்வர்ஜெயலலிதா, அதற்கு மறுநாள் முதல் தன்னுடைய இடைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.
இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் 18ம் தேதி வாணியம்பாடியில் ஜெயலலிதா துவக்கவுள்ளார்.
வாணியம்பாடி அதிமுக வேட்பாளரான ஆர். வடிவேலுவை ஆதரித்து அத்தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காகமூன்று நாட்களுக்கு அங்கு முகாமிடவுள்ளார் ஜெ.
அதற்கு முன்பாக, 17ம் தேதியே சென்னையை விட்டுக் கிளம்பும் ஜெயலலிதா, ஆரணியில் உள்ள படவேடுரேணுகாம்பாள் கோவிலுக்குச் செல்கிறார்.
அந்தக் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ரேணுகாம்பாளை வழிபட்ட பிறகு, அங்குநடைபெறவுள்ள அன்னதானத் திட்டத்திலும் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளார்.
அதன் பிறகு நேராக வாணியம்பாடி சென்று அங்கு அன்று இரவில் தங்கும் ஜெயலலிதா, மறுநாள் தன்னுடையபிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.
வாணியம்பாடியைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளிலும் அதிமுகவேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications