வெயில் கொடுமை: புதுவை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும் ஜூன் 17ஆம் தேதிதான் திறக்கப்படும்என்று அம்மாநிலக் கல்வி அமைச்சரான கே. லட்சுமி நாராயணன் கூறினார்.
தற்போது கோடை வெப்பம் கடுமையாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜூன் 6ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன் 3ம் தேதியும் திறக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாண்டிச்சேரியில் வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வெயில் மேலும் ஒரு மாதம்வரை நீடிக்கும் என்று தெரிகிறது.
இதையடுத்து, பள்ளிகளுக்குக் கூடுதலாக 14 நாட்கள் விடுமுறை கொடுக்க பாண்டிச்சேரி அரசு தீர்மானித்தது.
அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வரும் ஜூன் 17ம் தேதிதான் திறக்கப்படும் என்று லட்சுமிநாராயணன் கூறினார்.












Click it and Unblock the Notifications