துக்ளக் தர்பாரான தமிழக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
துக்ளக் தர்பார் போலத்தான் தற்போதைய தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சென்னை மாநகரமேயரான மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் அனுமதி பெறாமலேயே மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்று சட்டசபையில் மசோதா நிறைவேறியுள்ளது.
இதை மீறுபவர்கள் ரூ.1,000 அபராதம் செலுத்தி விட்டாலே போதும் என்றுதான் அரசு கருதுகிறது போலும்.
மேலும் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்ட மசோதா முழு வடிவம் பெறுவதற்குப் பல விதிமுறைகள் உள்ளன.
எனவே இந்த மசோதா சட்டமாகும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.
மொத்தத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு துக்ளக் தர்பாராகவே மாறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications