வரதட்சணை கொடுமை: மேலூர் அருகே ஒரு வயது மகனுடன் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வரதட்சணை கொடுமை காரணமாக ஒரு இளம்பெண் தன்னுடைய ஒரு வயதுமகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.
மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பாளையூர்பட்டியைச் சேர்ந்த செழியன்என்பவரைக் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது செழியனுக்கு 15 பவுன் தங்க நகைகளும் ரூ.16,000 பணமும் பெண் வீட்டிலிருந்து வரதட்சணையாகக்கொடுக்கப்பட்டது.
இந்தத் தம்பதியினருக்கு தற்போது 15 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மேலும் அதிகமான வரதட்சணை கேட்டு, தன் மனைவியைத் துன்புறுத்தினார் செழியன்.
இதனால் வெறுத்துப் போன செழியனின் மனைவி, தன்னுடைய ஆண் குழந்தையைக் கொன்று விட்டு தானும்தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications