ராஜிவ் கொலையாளிகளை உடனே தூக்கிலேற்ற வேண்டும்: சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட 4 குற்றவாளிகளை வரும்ஆகஸ்டு 15ம் தேதிக்குள் தூக்கில் போடாவிட்டால், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

சென்னையில் அவர் இன்று நிருபர்கிடம் கூறியதாவது:

தனி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு ராஜிவ் கொலையாளிகளுக்கு அந்தத் தண்டனையைஉறுதி செய்து கடந்த 1998ம் ஆண்டு மே 12ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் ராஜிவ் கொலையாளிகளை இன்னும் தூக்கில் போடாமல்உள்ளது மத்திய அரசு.

வரும் ஆகஸ்டு 15ம் தேதிக்குள் இந்த நான்கு குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும். இல்லையென்றால்இது தொடர்பாக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.

குற்றவாளிகளில் ஒருவரான நளினியை மட்டும் விடுதலை செய்ய ஜனாதிபதியின் பரிந்துரையைக் கோரியுள்ளகாங்கிரஸ் தலைவரும் ராஜிவின் மனைவியுமான சோனியா காந்தியிடமும் இந்த விஷயம் குறித்து வற்புறுத்துவேன்.

இலங்கையில் இனப் பிரச்சனைக்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அங்கு மாநிலஅரசுகளை உருவாக்கினாலே போதும், அனைத்துப் பிரச்சனைகளும் எளிதில் தீர்ந்து விடும்.

குஜராத் வன்முறைகளால் இந்தியாவின் பெயர் வெளிநாடுகளில் மிகவும் கெட்டு விட்டது. இந்தவன்முறைகளுக்குப் பொறுப்பேற்று மத்தியில் ஆட்சியிலிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவி விலகவேண்டும் என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+