இறந்தவர்களில் 10 பேர் குழந்தைகள், 8 பெண்கள்
ஜம்மூ:
ஜம்மூவில் ராணுவக் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட 24 பேரில் 10 குழந்தைகளும் 8பெண்களும் அடங்குவர்.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள்ஜம்மூ அருகே உள்ள கலுச்சாக்கில் ஒரு பஸ்சை வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகள் அப்போது நடத்திய சராமாரித் துப்பாக்கிச் சூட்டில், 7 பயணிகள் கொல்லப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே சென்ற தீவிரவாதிகள், அருகிலிருந்து ராணுவக்குடியிருப்புக்குள்ளும் புகுந்து, கண்மூடித் தனமாகச் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் குடியிருப்பில் இருந்த 5 ராணுவ வீரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 குழந்தைகளும் 8பெண்களும் உயிரிழந்தனர்.
மேலும் பலர் குண்டுக் காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.