For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஷ்கர்-ஏ-தொய்பாதான் காரணம்

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ:

ஜம்மூவில் நேற்று ராணுவக் குடியிருப்பிலும் பஸ்சிலும் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலுக்குலஷ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று இந்திய உளவுத் துறையினர்கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-மசூரான் மற்றும் ஜமாத்-உல்-முஜாகிதீன் ஆகிய தீவிரவாதஅமைப்புகள் பொறுப்பேற்றுள்ளதாக நேற்று முதலில் தகவல்கள் வந்தன.

ஆனால் அனைவரின் கவனத்தையும் திசை திருப்புவதற்காக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பே இவ்வாறு தவறானதகவல்களைப் பரப்பியதாக இந்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினரின் வயர்லெஸ் செய்திகளை இடைமறித்துக் கேட்டபோது இது தெரிய வந்ததாகஉளவுத்துறை தெரிவித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தையும் இந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தான்தாக்கினர்.

இந்தத் தாக்குதலுக்கு உதவி பிடிபட்டுள்ள 4 பேருக்கு எதிராக நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டியே நேற்று ஜம்மூவிலும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினர்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X