ஜம்மூ தாக்குதல்: வாஜ்பாயுடன் புஷ் பேச்சு
வாஷிங்டன்:
ஜம்மூவில் உள்ள ராணுவக் குடியிருப்பின் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று இரவு பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவிவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்தியாவில் மட்டுமல்ல. தெற்காசியாவின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதம் வெற்றி பெறுவதை அமெரிக்கஅனுமதிக்காது என்று வாஜ்பாயிடம் கூறிய புஷ் ஜம்மூவில் நடந்த இந்தக் கொடூரமான தாக்குதலை அமெரிக்காவன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க மக்களின் சார்பில் தன்னுடைய ஆழ்ந்தஇரங்கலையும் வாஜ்பாயிடம் தெரிவித்தார்.
தெற்காசியாவின் அமைதியைக் குலைக்கும் விதமாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதுஅமெரிக்காவுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் புஷ் கூறினார்.
புஷ்சுக்கு நன்றி தெரிவித்த வாஜ்பாய், இச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சுமார் 5 நிமிடங்கள் இவர்களுடைய டெலிபோன் பேச்சு நீடித்தது.












Click it and Unblock the Notifications