கோவை குண்டு வெடிப்பு கைதிகள் திடீர் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் கைதிகளில் இரண்டு பேர் கடந்த 3நாட்களாகத் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய பல கைதிகளும் முக்கியக் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து தங்கள் பெயர்களைநீக்கிவிட்டு வழக்கை வேகமாக முடிக்க வேண்டும் என்று கோரி அடிக்கடி உண்ணாவிரதம் இருந்து விடுகின்றனர்.

அந்த வகையில் அபு சலி மற்றும் ஷேக் பக்ருதீன் ஆகிய இரு கைதிகளும் கடந்த செவ்வாய்க்கிழமைகாலையிலிருந்து திடீரென்று உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர்.

முக்கியக் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து தங்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்றும் அதுவரை தாங்கள் எதுவும்சாப்பிடப் போவதில்லை என்றும் கூறி கொடுக்கும் உணவையும் அவர்கள் சாப்பிடாமல் இருந்து வருவதாக சிறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அந்த இரு கைதிகளும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு வருவதாகவும் விசாரணைக்காக தனிநீதிமன்றத்திற்கும் வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மொத்தம் 165 பேர் கைதாகி அங்குள்ள ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+