இனி குடும்பத் தலைவர் வந்தால் தான் ரேஷனில் அரிசி !
சென்னை:
குடும்பத் தலைவர்களே ரேஷன் கடைக்கு நேரடியாக வந்தால் தான் அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுபுது உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரிசி முதல் சர்க்கரை வரை பாமாயில் முதல் கெரசின் வரை ரேஷனில் எது போட்டாலும் வாங்கக் கூடிய நடுத்தரக்குடும்பங்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களும் தான் நம் நாட்டில் அதிகம்.
இதுவரை வீட்டில் உள்ள யாராவது ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவது தான் நம்முடையவழக்கம். ஆனால் இனிமேல் குடும்பத் தலைவர்களே நேரடியாக ரேஷன் கடைக்குச் சென்றால் தான் அரிசிகிடைக்குமாம்.
வரும் ஜூலை 1ம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதற்கு முன்னதாகஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 24 கூப்பன்கள் வழங்கப்படும்.
குடும்பத் தலைவரே நேராக ரேஷன் கடைக்குச் சென்று இந்தக் கூப்பனைக் கொடுத்தால் தான் அரிசி கிடைக்கும்.
இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் 24 கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
ரேஷன் அரிசி தரமாக உள்ளதால் தற்போது ரேஷன் கடைக்கு வந்து அரிசி வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளதாகக் கூறுகிறது தமிழக அரசு.
இதுவரை ஒரு மாதத்திற்கு 1.8 லட்சம் கிலோ அரிசி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தற்போது ஒருமாதத்திற்கு 2 லட்சம் கிலோவுக்கும் அதிகமான அரிசி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications