For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிறந்த பிஞ்சை தானே கொன்ற தாய்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேலம் மாவட்டம் உடையபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் தனக்குப் பிறந்து சில நாட்களே ஆன பெண்குழந்தையைக் கொன்று மண்ணில் புதைத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

உடையப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மது. இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.பெண் குழந்தை என்பதால் அதை மது குடும்பத்தினர் விரும்பவில்லை. அதைக் கொல்லத் திட்டமிட்டனர்.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் குழந்தை இறந்து விட்டதாக மது குடும்பத்தினர் கூறினர். பால்ஊட்டிக் கொண்டிருக்கும்போது மூக்கில் ரத்தம் வந்து குழந்தை இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தில்உள்ளவர்களிடம் மது கூறினார்.

பின்னர் குழந்தையை புதைத்து விட்டனர்.

இதுகுறித்து சந்தேகம் அடைந்த சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்துவிசாரணை நடத்தியபோது, மதுதான் குழந்தையைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார்கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X