இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின்றன.
சுமார் 5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி இயக்குனரகம்அறிவிக்கிறது.
12 மணிக்கு மேல் இந்த முடிவுகள் கீழ்கண்ட வெப்சைட்களில் வெளியாகும்.
சுமார் 5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
இதுதவிர ஏர்டெல் தொலைபேசி நிறுவனமும் தொலைபேசி மூலம் முடிவுகளை அறிவிக்கிறது. 044-98400-400 என்ற தொலைபேசி எண்மூலமும் முடிவுகளை கேட்டறியலாம்.
மதிப்பெண்களுடன் மாணவர்களின் வெற்றி-தோல்வி விவரம் காலை 11 மணிக்கே தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும்ஒட்டப்பட்டுவிடும். வரும் 25ம் தேதி அந்ததந்தப் பள்ளிகளில் சான்றிதழ் வழங்கப்படும்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் 6 வாரத்திலேயே மீண்டும் தேர்வெழுத வகை செய்யும் புதிய திட்டமும் அமலாக்கப்பட்டுள்ளது.இதனால் தோல்வியடையும் மாணவர்கள் ஓராண்டு வீணாகிவிட்டதே என்ற கவலையேபட வேண்டிய அவசியம் இல்லை. இந்தத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பெற்றோர் மற்றும் மாணவர்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் கல்வி அமைச்சர் தம்பிதுரை.
தேர்வு முடிவுகள் முதலில் 25ம் தேதி தான் வெளிவர இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 8 நாட்கள் முன்னதாகவே முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. பொது நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமாணவர்களை காத்திருக்க வைக்க அரசு விரும்பாததால் முன் கூட்டியே முடிவுகளை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications