இலங்கைக்கு போகவிருந்த ரூ.12.5 கோடி பறிமுதல்
சேலம்:
பெங்களூர்-தூத்துக்குடி வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ.12.5 கோடி மதிப்புள்ள ஹெராயினைப்போதை ஒழிப்புத் துறையினர் சேலத்தில் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் பஸ்சில் போதை மருந்து கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்துசேலம் போலீசார் அங்கு வரும் பஸ்களில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது பெங்களூரிலிருந்து சேலம் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஒரு பஸ்சில் சந்தேகத்திற்கிடமானஒருவரைப் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறவே, அவர் வைத்திருந்தசூட்கேசைக் கைப்பற்றிய போலீசார் அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துச் சோதனையிட்டனர்.
அந்த சூட்கேசில் உள்ள சேலைகளுக்கு மத்தியில் அவர் ஹெராயின் என்ற போதைப் பொருளைவைக்கப்பட்டிருப்பதை அப்போது போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்தப் பயணியைக் கைது செய்தபோலீசார், ஹெராயினையும் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 12.5 கிலோ எடை கொண்ட அந்த ஹெராயினின் சர்வதேச மார்க்கெட் மதிப்பு ரூ.12.5 கோடியாகும்.
மத்தியப் பிரதேசத்திலிருந்து தான் அந்த ஹெராயினைக் கொண்டு வந்ததாகவும் அதை தூத்துக்குடி வழியாகஇலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட அந்தப் பயணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications