For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய தாக்குதலில் 8 பாக். வீரர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ:

பாகிஸ்தானுக்கு பதிலடி தருவது குறித்து ஒரு பக்கம் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தாலும், இந்தியராணுவம் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

நேற்று காலை எல்லையில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கித் தாக்குதலையடுத்து எல்லையோரத்த்தில் வசித்து வந்த2000 குடும்பங்களை ராணுவம் வெளியேற்றியது.

பின்னர் மாலையில் இந்திய ராணுவம் கடும் பதில் தாக்குதலில் இறங்கியது. இதில் பாகிஸ்தானின் பல பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டன. 8 பாகிஸ்தான் வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்தச் சண்டையில் 4 இந்திய வீரர்கள் காயமடைந்தனர். கதுவா மாவட்ட எல்லையில் பாகிஸ்தானிய பதுங்குகுழிகள் மீது நடந்த தாக்குதலில் அவை தீப் பிடித்து எரிந்தன.

பாகிஸ்தான் ராணுவம் மீதான தாக்குதலில் இந்திய ராணுவத்துடன் எல்லைப் பாதுகாப்புப் படையும் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஐரோப்பா நெருக்குதல்:

இந் நிலையில் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய யூனியன் பாகிஸ்தானை நெருக்கஆரம்பித்துள்ளது.

அந்த யூனியனின் வெளியுறவு கமிஷ்னர் கிரிஸ் பேட்டன் அடுத்த வாரம் இஸ்லாமாபாத் சென்று முஷாரபைசந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், தேர்தலை நடத்தி ஜனநாயக அரசைஏற்படுத்தவும் அவர் முஷாரபை வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X