பிரபாகரனை பிடிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்: சோனியா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்துஇந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் அன்பரசு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம்எழுதியிருந்தார். அதில் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அடுத்த அகிலஇந்திய காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந் நிலையில் அன்பரசுக்கு சோனியா காந்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அன்பரசு இம் மாதம் 5ம் தேதி இக்கடிதம் எழுதினார். சோனியா 9ம் தேதி பதில் கடிதம் அனுப்பினார். இரு கடிதங்களையும் அன்பரசு இன்றுபத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார்.

அன்பரசு எழுதியுள்ள கடித விவரம்:

தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர நீங்கள் (சோனியா)மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இது எனக்கு மன வருத்தம் தந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை (இதுஅன்பரசு திண் இளங்கோவன் லோக்கல் பாலிட்டிக்ஸ்!!). உங்கள் (சோனியா) மீதான இந்த தவறான குற்றச்சாட்டைத்துடைத்தெறிய வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று அன்பரசு தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதற்கு சோனியா எழுதியுள்ள பதில் கடிதத்தில்,

ராஜிவ் காந்தி கொலையில் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேணடும் என காங்கிரஸ் மத்தியஅரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இனியும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+