மாமன் மகள் கிடைக்காததால் தற்கொலை மிரட்டல்: வாலிபர் கைது
சென்னை:
மகளைக் கட்டி வைக்க மாமா மறுத்து விட்டதால் கோபமடைந்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்யப் போவதாகமிரட்டனார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் முருகேஷ் என்ற முருகேசன். இவரது பெற்றோர் கொல்கத்தாவில் வசித்து வருகின்றனர். ஆனால் முருகேஷ்கடந்த பல வருடங்களாக சென்னை அருகே உள்ள செம்பியத்தில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருக்கிறார்.
மாமாவின் மகள் மீது அவருக்கு காதல் பிறந்தது. ஆனால் அந்தப் பெண் முருகேசனை விரும்பவில்லை என்று தெரிகிறது. மாமாவிடம்,அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு முருகேசன் கேட்டுள்ளார்.
ஆனால், எனது மகள் உன்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று முருகேசனின் மாமா கூறிவிட்டார். மேலும்முருகேசனை கொல்கத்தாவிற்குச் சென்று விடுமாறும் கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து முருகேசன் கோபித்துக் கொண்டு கொல்கத்தா சென்றுவிட்டார்.
இந் நிலையில் தனது மகளை வேறு மாப்பிள்ளைக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டார் மாமா.
இதை அறிந்த முருகேசன் கோபத்துடன் சென்னை திரும்பினார். நான் எத்தனையோ முறை கேட்டும் மகளைக் கொடுக்க மறுத்து விட்டுஇப்போது வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டீர்களே, நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என் சாவுக்குநீங்கள்தான் பொறுப்பு என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அவரை சமாதானப்படுத்தி உட்கார வைத்த மாமா, உடனடியாக செம்பியம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்துவந்து முருகேசனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications