நாமக்கல்: "ஓ போடு..." பாடலுக்கு நிர்வாண நடனமாடிய 2 பெண்கள் கைது
நாமக்கல்:
நல்லூர் கந்தம்பாளையம் அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவின்போது நிர்வாண நடனம் ஆடிய 2 பெண்கள்உள்பட 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ளது ப"ள்பாளையம். அங்குள்ள மாரியம்மமன்கோவில் திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்சசிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நடன நிகழ்ச்சியில் சேலம்மாவட்டம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ராணி (30) மற்றும் எருமபாளையத்தைச் சேர்ந்த மாலதி (34)ஆகியோரின் நடனம் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் "ஜெமினி" படத்தின் "ஓபோடு..." பாடலுக்கு ராணி-மாலதி இணை நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஆட ஆரம்பித்தது.
கவர்ச்சி உடையுடன் அவர்கள் போட்ட ஆட்டம் ரசிகர்களைச் சொக்க வைத்தது. கை தட்டி ஆர்வத்துடன் நடனமங்கைகளை ரசிகர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதனால் மேலும் உற்சாகமாகிப் போன ராணியும் மாலதியும் மேடையிலேயே திடீரென்று தாங்கள் அணிந்திருந்தஓரிரண்டு உடைகளையும் கழற்றி வீசி எறிந்து விட்டு நிர்வாண நடனம் ஆடி ரசிகர்களைச் சூடேற்றினர்.
இந்தப் பாடல் முடிந்த பிறகும் நின்று விடாமல் மேலும் சில பாடல்களுக்கும் ராணியும் மாலதியும் நிர்வாண நடனம்ஆடினர்.
தொடர்ந்து நிர்வாண நடனங்களைப் பார்த்து பெண்களும் சில பெரியவர்களும் முகம் சுழித்தனர். உடனே இந்தச்செய்தி நாமக்கல் போலீசாரின் கவனத்துக்குச் சென்றது.
உடனடியாக போலீசார் நடன நிகழ்ச்சி நடந்த இடத்திற்குச் சென்று நிர்வாண நடனம் ஆடிய ராணியையும்மாலதியையும் கைது செய்தனர்.
மேலும் இந்த நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இரும்பு பாலம் செல்வம் (38), தங்கராசு (35),பள்ளபாளையம் கண்ணுப் பையன் (35), துரைசாமி (25) மற்றும் உத்திகாபாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ் (30)ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கோவில் திருவிழாவில் நிர்வாண நடனம் ஆடிய பெண்கள் மீதும் அதற்கு ஏற்பாடுசெய்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications