குஜராத்தில் இருந்த ராணுவம் எல்லைக்கு விரைகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

எல்லையில் போர் அபாயம் சூழ்ந்துள்ளதால் வன்முறையையொட்டி குஜராத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவப்படைகள் அங்கிருந்து விலக்கப்பட்டுள்ளன.

இந்தப் படைகள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் அம்மாநில பா.ஜ.க.முதல்வர் நரேந்திர மோடி மற்றும் போலீசாரின் உதவியுடன் வன்முறையாளர்கள் ரத்தக் களரியை ஏற்படுத்திவந்தனர்.

இந்தியா மற்றும் உலக அளவிலான எதிர்ப்பால் பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. கேபிஎஸ் கில்அனுப்பப்பட்டார். ராணுவமும் குவிக்கப்பட்டது.

கில் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஒரே வாரத்தில் வன்முறை ஓய்ந்தது. வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.க.,சிவசேனை, பஜ்ரங் தள் ஆட்களையும் பிடித்து உள்ளே தள்ளினார் கில். வன்முறையாளர்களுக்கு உதவியாக இருந்தபோலீஸ் உயர் அதிகாரிகளும் அதிகாரமில்லாத பதவிகளுக்கு தூக்கி வீசப்பட்டனர்.

இதனால் இன்றொடு 8வது நாளாக குஜராத்தில் வன்முறை அமைதி நிலவி வருகிறது. கடந்த வாரம் வரைசராசரியாக ஒரு நாளைக்கு 10 பேர் உயிரிழந்து வந்தனர். மொத்தம் 1200 உயிர்கள் இரு மாதங்களில் பலியாயின.

இந் நிலையில் பாகிஸ்தானின் வாலாட்டல் காரணமாக அந் நாட்டுக்கு பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது.ராணுவப் படைகள் காஷ்மீர் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாபின் எல்லைப் பகுதிகளிலும்குவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் குஜராத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

நேற்று கடலோர காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படையை கடற்படை மற்றும் ராணுவத்தின் கீழ் கொண்டு வந்தஇந்திய அரசு இப்போது மத்திய அரசுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல்களையும் கடற்படையின் கட்டுப்பாட்டில்கொண்டு வந்துள்ளது.

தேவைப்பட்டால் இந்தக் கப்பல்கள் கடற்படையின் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+