தவறுதலாக துப்பாக்கி வெடித்து வங்கி காவலாளி சாவு
சென்னை:
சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காவலாளி வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில்அவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கதீட்ரல் கிளையில் நேற்று (திங்கள்கிழமை)இந்தச் சம்பவம் நடந்தது.
வங்கிக் காவலாளிகள் பொதுவாக இரட்டைக் குழல் துப்பாக்கிகளைத் தான் பாதுகாப்புக்காக வைத்திருப்பார்கள்.இந்த வங்கியின் காவலாளியான ராமனும் இது போன்ற துப்பாக்கியை வைத்திருந்தார்.
நேற்று மதியம் சுமார் 2.15 மணியளவில் திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்துபதறியடித்துக் கொண்டு வங்கி ஊழியர்கள் அனைவரும் வங்கியின் வாசலுக்கு ஓடிச் சென்று பார்த்தனர்.
அப்போது ராமன் தலை சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் அருகில் யாரும்இல்லாததால், தவறுதலாக அவருடைய விரல் பட்டுத் தான் துப்பாக்கி வெடித்திருக்க வேண்டும் என்று வங்கிஊழியர்கள் கூறினர்.
தகவலறிந்து விரைந்து வந்த ஆயிரம் விளக்குப் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கியில் பணிபுரிந்து வந்த ராமனின் மகன் அசோக்கும் இதே வங்கி வளாகத்தில்உள்ள கேன்டீனில் தான் பணிபுரிந்து வருகிறார். ராமனுக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications