தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய படை வராது: டி.ஜி.பி.
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தல் மிகவும் அமைதியாக நடப்பதற்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்புநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ளஇடைத் தேர்தலின் போது தமிழகப் போலீசாரே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக மத்திய பாதுகாப்புப் படை எதுவும் வராது.
வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கு எங்காவது இடையூறு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும்.
மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும்.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அடகு மற்றும் நகைக் கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.38 லட்சம்மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டன.
அதே போல் வட மாநிலத்திலிருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்ட 108 தொலைக் காட்சிப் பெட்டிகள் சென்னைஅருகே கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்து 48 தொலைக்காட்சிப் பெட்டிகள் மீட்கப்பட்டன என்றார் நெய்ல்வால்.












Click it and Unblock the Notifications