பெட்ரோலிய இருப்பு போதுமான அளவு உள்ளது: இந்தியா
மும்பை:
போர் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பு போதுமான அளவில்இருப்பதாக பெட்ரோலிய அமைச்சர் ராம் நாயக் கூறியுள்ளார்.
எண்ணெய் கிடங்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், சமையல் எரிவாயு கிடங்குகள் ஆகியவைபாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாகலாம். இதையடுத்து இவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுஎன்றார்.
போர்க் காலத்தில் எண்ணெய் இருப்பு மிக முக்கியம். ஆயுதங்களுக்கும், வாகனங்களுக்கும் பெட்ரோல், டீசல்,விமானப் பெட்ரோல், நாப்தா, கிரீஸ் தேவை. நமக்கு இந்த வகையில் எந்தப் பிரச்சனையும் வராது. போதியஅளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கார்கில் போரின்போது காஷ்மீரில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டது. இதனால் லே பகுதியில்இன்னொரு மையம் அமைக்கப்பட்டுவிட்டது. இங்கு விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்ப முடியும். இந்தப்பகுதியை பாகிஸ்தானால் தாக்க முடியாது என்றார்.
கடற்பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கும் பெட்ரோலிய கிணறுகளுக்கும் போதிய பாதுகாப்புத் தரப்படும்என்றார் நாயக்.
மிக் விமானங்கள் தயார்:
அதே போல கடந்த சில வாரங்களாக தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிக்-21 பிஸ்,மிக்-29 ரக விமானங்கள் மீண்டும் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
தரையிறக்கப்பட்ட இந்த ரக விமானங்களை மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்தவும், தாக்குதலுக்குத் தயார் செய்யவும்இந்திய விமானப் படைக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நம்மிடம் இந்த வகைகளைச் சேர்ந்த 125 விமானங்கள் உள்ளன. எதிரி நாட்டு விமானங்களை தடுத்து நிறுத்தும்முக்கிய விமானங்கள் இவை. அத்தோடு தாக்குதலுக்கும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.
ஹிஸ்புல்-முஜாகிதீன் மிரட்டல்:
இதற்கிடையே பாகிஸ்தானை மிரட்டி வரும் இந்தியாவைத் தாக்குவோம் என ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதஅமைப்பு கூறியுள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பல பகுதிகளை நாங்கள் தான் கட்டுப்படுத்தி வருகிறோம்.இதனால் அங்கு தாக்குதல் நடத்தினால் இந்தியப் படைகள் முதலில் எங்களைத் தான் எதிர்கொள்ள வேண்டி வரும்என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதன்மூலம் தீவிரவாதிகளின் சொர்க்கலோகமே பாகிஸ்தான் தான் என்பது மீண்டும் ஒருமுறைநிரூபணமாகியுள்ளது.