ராஜஸ்தான் எல்லையில் இந்தியா போர் பயிற்சி
டெல்லி:
ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகானீர் பகுதியில் இந்திய ராணுவமும் விமானப் படையும் போர்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
மிக்-21, மிக்-29 ரக போர் விமானங்களும் இந்தப் போர் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. நேற்றிரவு முழுவதும்இந்தப் பயிற்சி நடந்தது. இதை பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ், ராணுவத் தளபதி பத்மநாபன், விமானப்படைத் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
ஆப்ரேஷன் பராக்கிரம்-3 என்ற பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சி தொடர் போர் பயிற்சிகளில் ஒன்றாகும். ஆனால்,இப்போது எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் இந்தப் பயிற்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயிற்சி கடந்த வாரமே தொடங்கிவிட்டது.
இதற்கிடையே ராஜஸ்தான் எல்லையில் குண்டு வீச்சு போர் விமானங்களான ஜாகுவார் விமானங்களும், புதிதாகராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள டி-90 ரக டாங்கிகளும் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஜாகுவார் விமானங்கள் மிக அதிக எடை கொண்ட குண்டுகளையும், லேசர் ரக குண்டுகளை வீசும் திறன்கொண்டவை. குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த விமானங்கள் எளிதில் ரேடார்களின் கண்ணில் இருந்து தப்பிஎதிரி நாட்டுக்குள் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை.
பிரிட்டின் வடிவமைத்த இந்த ரக விமானங்களை இப்போது இந்தியாவே தயாரித்து வருகிறது.
அதே போல காலியாக இருந்து மேற்குப் பிராந்திய விமானப் படைத் தலைவர் பதவி நிரப்பப்பட்டுள்ளது. ஏர்மார்ஷல் ஏ.ஆர். காந்தி இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பிராந்திய விமானப் படை தான்பாகிஸ்தானை சமாளிக்க வேண்டிய முக்கிய படையாகும்.
இந் நிலையில் அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளைக் கண்டறியும் நவீன ரேடார்கள், பி3சி ரக உளவுவிமானஙகள், கமாண்டோ தாக்குதலுக்கு உதவும் தொலைத் தொடர்பு கருவிகளை விரைவில் வாங்கவும் இந்தியாதிட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் யோகேந்திர நாராயண் அமெரிக்காசென்றுள்ளார்.
ஜெர்மனி ஆதரவு:
இந் நிலையில் இந்தியா மீதான கொலைவெறித் தாக்குதல்களை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறுபாகிஸ்தானுக்கு ஜெர்மனி காட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து கவலை அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சமரசமுயற்சியில் ஈடுபடப் போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இரு நாடுகளும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கோரிக்கைவிடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications