வாணியம்பாடியில் கருணாநிதி பிரச்சாரம்
வாணியம்பாடி:
வாணியம்பாடி தொகுதி திமுக வேட்பாளரான நாகூர் ஹனீபாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரான கருணாநிதிஇன்று தன்னுடைய 2 நாள் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் இடைத் தேர்தல்நடைபெறவுள்ளதையடுத்து மூன்று இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டத் தொடங்கிவிட்டது.
கடந்த 18ம் தேதி முதல் வாணியம்பாடியில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாதன் கட்சி வேட்பாளரான வடிவேலுவை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கருணாநிதி இத்தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து கிளம்பிய கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
இடைத் தேர்தல் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதற்காக மத்தியப் படைகளை அனுப்ப வேண்டும்என்று திமுக பொதுச் செயலாளரான அன்பழகன் தலைமை தேர்தல் கமிஷனைக் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தேர்தல் கமிஷன் இதுவரை இதற்குப் பதிலளிக்கவில்லை.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் திமுகவும் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் பாமகவும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு தான் பிரச்சாரத்திற்குச் செல்கிறேன் என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வழியனுப்பி வைக்க, முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டசபை திமுகதுணைத் தலைவருமான துரை முருகன், சென்னை மாநகர மேயர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடுவீராசாமி மற்றும் பொன்முடி ஆகியோர் கருணாநிதி கிளம்பும் போது உடனிருந்தனர்.
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட கலந்திராவில் இன்று மாலை 5 மணிக்குப் பிரச்சாரத்தைத் தொடங்கியகருணாநிதி தொடர்ந்து வேப்பம்பட்டு, முல்லை, நிம்மியம்பட்டு ஆகிய ஊர்களிலும் பிரச்சாரம் செய்கிறார். பின்னர்இரவு 7 மணிக்கு ஆலங்காயத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதன் பிறகு 8 மணிக்கு வெள்ளக்குட்டையில் பிரச்சாரம் செய்துவிட்டு, 9 மணிக்கு ஆம்பூர் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து நாளை மாலை மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கும் கருணாநிதி, பல்வேறு கிராமங்களில்பிரச்சாரத்தை முடித்து விட்டு கடைசியாக வாணியம்பாடியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.அத்துடன் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கத்தில் பாமக வேட்பாளர் பார்வேந்தனை ஆதரித்து 25ம் தேதியும்,சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியத்தை ஆதரித்து 27 மற்றும் 28ம் தேதியும் கருணாநிதி அந்தத்தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
பாட்டுப் பாடி ஓட்டு சேகரிக்கும் ஹனீபா:
இதற்கிடையே வாணியம்பாடியில் தன்னுடைய கணீர் குரலால் பாட்டுக்களைப் பாடியே ஓட்டுக்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார் ஹனீபா.
தன்னுடைய பிரச்சார வேனில் அனைத்து இசைக் கலைஞர்களையும் உட்கார வைத்துக் கொண்டு "யாருக்கய்யாஉங்க ஓட்டு? யாருக்கம்மா உங்க ஓட்டு" என்று தன்னுடைய வெண்கலக் குரலால் பாடி மக்களை மகிழ்விப்பதோடுநில்லாமல் திமுக தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஹனீபாவின் பாடல்களைக் கேட்பதற்காகக் கூடும் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து போன திமுக தொண்டர்களிடம்"மக்கள் பாட்டை மட்டும் தான் கேட்பார்கள். ஓட்டுப் போட மாட்டார்கள்" என்று அதிமுகவினர் கூறவே, திமுகவினர்மிகவும் கடுப்பாகிப் போனார்கள்.












Click it and Unblock the Notifications