தூத்துக்குடி-கொழும்பு இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஒப்பந்தம்விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும், குறிப்பாக, தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து சில ஆண்டுகளுக்குமுன் நிறுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் அமைதிப் பேச்சு விரைவில் துவங்கவுள்ள சூழ்நிலையில் இரு நாடுகளுக்குமிடையேமீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றுதெரிகிறது.

இது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கையில் கப்பல் அமைச்சரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். மேலும், இது தொடர்பாக, இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சரக அதிகாரியுடன் இலங்கைகப்பல் போக்குவரத்து செயலாளர் பெரேரோ பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

இதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வரும் 23ம் தேதி இந்தியாவரவுள்ளார். இந்தியாவில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் போதே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும். அதன் பின்புசென்னைக்கும் கொழும்புக்கும் இடையே உல்லாசக் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி விவாதிக்கப்படும்.ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்துதொடங்குவது சாத்தியமில்லை என்று பெரரோ கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+