சென்னை துறைமுகத்தை தாக்க தீவிரவாதிகள் சதி: பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
சென்னை துறைமுகத்தை தீவிரவாதிகள் தாக்க திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் துறையில் இருந்து வந்தசெய்தியைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் துறைமுகங்களுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தற்போது, சென்னைத்துறைமுகத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தகர்க்க திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு வரும்கப்பல்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக பயணிகள் கப்பல்களுக்கு கூடுதல் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் "ஹோவர்கிராப்ட்" ரகப்படகுகளும் இந்தப் பாதுகாப்புப் பணியிலும் தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளன.
கப்பலில் செல்லவிருக்கும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என்றுதுறைமுகத் தலைவர் பாஸ்கர தாஸ் கூறினார்.
மேலும் பாதுகாப்பு குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும்கூறினார்.












Click it and Unblock the Notifications