ஜனாதிபதி தேர்தல்: கிருஷ்ண காந்த் போட்டி?
டெல்லி:
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதிக்காக நடக்கவுள்ள தேர்தலில் துணை ஜனாதிபதியான கிருஷ்ணகாந்த்தும்போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் ஜூலை 24ம் தேதியுடன் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதற்கு முன்பேஅடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதையடுத்து ஜனாதிபதி வேட்பாளருக்காகப் பலருடைய பெயர்களும் அடிபட்டு வருகின்றனர். இதற்காக பிரதமர்வாஜ்பாய் ஏற்கனவே அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பேச்சு நடத்த ஆரம்பித்து விட்டார்.
முன்னாள் தமிழக ஆளுநரும் தற்போதைய மகாராஷ்டிர ஆளுநருமான பி.சி. அலெக்சாண்டரை வாஜ்பாய் மற்றும்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேட்பாளராக நிறுத்தப் போவதாகத் தகவல்கள்வெளியாகின.
முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான அவர், இந்தியாவின் அமெரிக்கத் தூதராகவும் முன்னாள் பிரதமர்இந்திராகாந்தியின் அந்தரங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆனால் அலெக்சாண்டரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும்வெளியாகவில்லை. வாஜ்பாயும் தொடர்ந்து எதிர்க் கட்சிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாராயணனே தொடர்ந்து ஜனாதிபதியான நீடிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியபோதிலும்,அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றுவாஜ்பாயிடம் அக்கட்சி வலியுறுத்தியது.
ஆனால் நாராயணன் ஜனாதிபதியாகத் தொடர்ந்து நீடிப்பதை வாஜ்பாய் விரும்பவில்லை என்று தோன்றுகிறது.
இதற்கிடையே பிரதமரின் முன்னாள் அறிவியல் ஆலோசகரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம், கர்நாடகமாநில முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் பிரதமர் சந்திர சேகர் உள்பட பலருடையபெயர்களும் ஜனாதிபதி தேர்தலுக்காக அடிபடுகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகாந்த்தும் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடவுள்ளார் என்று தற்போது தகவல்கள்வெளியாக ஆரம்பித்துள்ளன.
இதற்காக அவர் முதற்கட்டமாக தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவை நாடியுள்ளதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்துக்குச் சென்ற கிருஷ்ணகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுஉள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து இதுகுறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பல முனைகளிலிருந்தும் ஜனாதிபதிக்குப் போட்டியிட தலைவர்கள் புறப்பட்டுள்ளதையடுத்து, ஜனாதிபதிதேர்தல் நல்ல சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications