காஷ்மீரில் முக்கிய அரசியல் தலைவர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஹூரியத் கான்பரன்ஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான அப்துல் கானி லோனை ஸ்ரீநகரில் நேற்று மாலைதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீர் அவாமி கமிட்டி சார்பாக நடந்த ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்ததீவிரவாதிகள் கிரினேட் குண்டுகளைச் சராமாரியாக வீசினர்.
பின்னர் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக அவர்கள் லோனைச் சுட்டனர். இதில் லோன் சம்பவ இடத்திலேயேரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
காஷ்மீரின் பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பு ஹூரியத் கான்பரன்ஸ் அமைப்பு. இதில்தீவரவாத்தை ஆதரிப்பவர்களும் உண்டு மிதவாதத்தை ஆதரிப்பவர்களும் உண்டு.
அப்துல் கனி லோன் தீவிரவாதத்தை எதிர்த்து வந்த தலைவராவார். இந்தியாவுடன் பேச்சு மூலமே பிரச்சனைகளைத்தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வந்தவர்.
இதனால் தான் அவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கொலைக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு தான் தனது தந்தையைக் கொன்றுள்ளதாக லோனின் மகன் சாஜித் குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் பிரதமர் வாஜ்பாய் இருக்கும நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீரில் வரும் அக்டோபரில்நடக்கவுள்ள தேர்தலில் அப்துல் கனி லோன் போட்டியிடவும் திட்டமிட்டிருந்தார். இதனால் காஷ்மீரில் அரசியல்தீர்வு ஏற்பட முக்கியத் தலைவராக அவர் விளங்கி வந்தார்.
லோனின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மகன் சாஜித்துடன் வாஜ்பாய்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் வாஜ்பாய்.
அப்துல் கனி லோனின் மறைவு காஷ்மீர் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்று குவித்து வந்ததீவிரவாதிகள் தற்போது அரசியல் கட்சிகள் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications