For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் தமிழக தொழிலதிபர் படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

சிக்மகளூர்:

தமிழகத்தைச் சேர்ந்த குணசேகரன் என்ற வியாபாரி கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் கயிற்றால் கழுத்தைநெறித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காபித் தோட்டம் வாங்குவதற்காக கர்நாடகாவிற்கு வந்த குணசேகரன் ஹாசனில் ஒருவரையும் சிக்மகளூரில் 2பேரையும் சந்தித்துள்ளார்.

பின்னர் சிக்மகளூரில் உள்ள ஒரு லாட்ஜில் அவர் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் குணசேகரன் இருந்த அறைக் கதவு திறக்கப்படாமலிருக்கவே,சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் அதைத் தட்டிப் பார்த்தார். தொடர்ந்து திறக்கப்படாமல் இருக்கவேபோலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீசார் குணசேகரன் இருந்த அறையின் கதவு உடைத்துத் திறந்தனர். அந்த அறையில் உள்ளகுளியலறையில் கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் குணசேகரன் பிணமாகக் கிடந்தார்.

முதலில் குணசேகரன் சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறினார். பின்னர் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்றனர். சிங்கப்பூரில் அவருக்கு தொழில்ரீதியிலான தொடர்புகள் இருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இவருக்கு 35 வயதிருக்கும்.

இவரது பணம், நகைகள் ஏதும் கொள்ளை போகவில்லை என்று தெரிகிறது. இந்தக் கொலை குறித்து போலீசார்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X