இடைத் தேர்தல்: ஒலி பெருக்கிகளுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப் பிடி
சென்னை:
இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஒலிபெருக்கிகள், வாகனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பலகட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகள் முழங்க வேண்டும். தெருவில்கட்டியிருந்தாலும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்தாலும் இந்த நேரத்திற்குள் மட்டுமே அவை ஒலிக்க வேண்டும்.இது கிராமப்புறங்களுக்கு பொருந்தும்.
ஆனால் நகர்ப்புறங்களில் அதாவது மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
லாரிகள், கார்கள், டெம்போக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள், ஸ்கூட்டர்கள், ஆட்டோக்கள் போன்றவற்றில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தியிருப்பவர்கள் அதற்கான பதிவு எண்ணை தங்களது வாகனத்தில் தெளிவாகஎழுதியிருக்க வேண்டும்.
வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல்அதிகாரியிடம் எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கான அனுமதியைகாவல்துறையிடம் முன்கூட்டியே பெற வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் சாரங்கி.












Click it and Unblock the Notifications