கோட்டையில் மீண்டும் ஒரு தற்கொலை முயற்சி
சென்னை:
சென்னைத் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தற்கொலை முயற்சிகள்அதிகரித்து வருகின்றன. லேட்டஸ்ட்டாக இந்த ஆண்டின் 8வது தற்கொலை முயற்சி நேற்று (திங்கள்கிழமை)நடந்தது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் தான் இந்தத் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன.காரணம், ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்து விட்டால் கண்டிப்பாக பலன் இருக்கும் என்ற எண்ணம் மக்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனு கொடுப்பதற்காக தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து மட்டுமில்லாமல்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வருகிறார்கள்.
ஆனால் அத்தனை பேரும் ஜெயலலிதாவை சந்திக்க முடிவதில்லை. இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் சிலர்தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில மாதங்களில் 7 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒரு தம்பதியர் உயிரிழந்தனர். கோயம்புத்தூரைச்சேர்ந்த அந்த தம்பதியின் குடும்பத்துக்கு உதவிய முதல்வர் ஜெயலலிதா, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறுபார்த்துக் கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அதையும் மீறி அவ்வப்போது தற்கொலை முயற்சிகளும், மிரட்டல்களும் நடக்கத்தான் செய்கின்றன.
இந்நிலையில் திங்கள்கிழமை திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்ற பெண் கோட்டைக்கு வந்தார்.சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த அவர் அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாகவும், அரசு தலையிட்டு தனக்கு நிவாரணம் தர வேண்டும் என்றுகோரி ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க வந்திருந்தார்.
ஆனால் அவரால் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்துவிட்டார். உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி முதியவர் ஒருவர் விஷம் குடித்தார். பின்னர் அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். அதே மாதம் 27ம் தேதி தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த நளினி-வேலுதம்பதியர் விஷம் குடித்து நீண்ட நேரம் உயிருக்குப் போராடி பரிதாபமாக இறந்தனர்.
ஏப்ரல் 13ம் தேதி சுப்ரமணியன் என்பவர் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் ரூ.2லட்சம் வரை மோசடிசெய்தது தொடர்பாக முதல்வரிடம் மனு கொடுக்க அவர் வந்திருந்தார்.
தொடர்ந்து ஏப்ரல் 29ம் தேதி வைரமுத்து-தமிழ்செல்வி என்ற தம்பதி தங்களது குழந்தைகளுடன் முதல்வரைப்பார்க்க வந்தனர். ஆனால் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் போகவே கோட்டை வளாகத்தில் அவர்கள்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். ஆனால் அதற்குள் சுதாரித்த போலீசார் அதைத் தடுத்துவிட்டனர்.
அதே நாளில், 56 வயது ராமபாண்டியன் என்ற திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் பூச்சி மருந்தைக் குடித்துத்தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இந்த தற்கொலை முயற்சிகள் தொடர் கதையாகியுள்ளது போலீசாரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.கோட்டை வளாகத்தில் எப்போதும் ஒரு வேன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. யாராவது தற்கொலைக்குமுயன்றால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்வதற்காகவே இந்த வேன்வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications