காமுக ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை
சென்னை:
ட்யூஷன் படிக்க வந்த 16 வயது மாணவியுடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளையும் பெற்றெடுத்த பின்அம்மாணவியைக் கைவிட்டு அவருடைய தற்கொலைக்குக் காரணமாக இருந்த ஆசிரியருக்கு கோயம்புத்தூர்விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் தன்னிடம் ட்யூஷன் படிக்க வந்த 16 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறிதன்னுடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பரிதாப மாணவியும் உடன்பட்டுள்ளார்.இத்தனைக்கும் அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.
ஆசிரியருடன் குடும்பம் நடத்திய அந்த மாணவிக்கு அவர் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்தது. தனது காம இச்சைதணிந்ததும், மாணவியை உதாசீனப்படுத்த ஆரம்பித்தார் அந்த ஆசிரியர்.
இந்நிலையில் திடீரென்று அம்மாணவியை விட்டு ஆசிரியர் பிரிந்து சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தஅந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ஆசிரியரைக் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கோயம்புத்தூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிசடையாண்டி அந்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார்.
மேலும் ஆசிரியர் மூலம் மாணவிக்குப் பிறந்த 2 குழந்தைகளின் பேரிலும் ரூ.8,000 டெபாசிட் செய்யவும் நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications