For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே ஓடும் ரயிலின் முன் தனது இரு குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்ஒரு பெண்.

செங்கல்பட்டு அருகே உள்ள கரிசாங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவரது கணவர்ராமகிருஷ்ணனுக்கும், வசந்திக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்குமாம். வசந்திக்கு சரளா என்ற 3 வயது பெண்குழந்தை உண்டு. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இதனால் ராமகிருஷ்ணன் கோபமடைந்தார். மீண்டும் பெண் குழந்தையா என்று ஆத்திரமடைந்தார். இதுதொடர்பாகஅவருக்கும் வசந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த வசந்தி தன்னுடையமகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து கைக் குழந்தையை ஒரு கையிலும், 3 வயது மகளை மறு கையில் தூக்கிக் கொண்டு சென்றவசந்தி, அந்தப் பகுதி வழியே வந்த விழுப்புரம்-செங்கல்பட்டு பாசஞ்சர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தாயுடன் அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் சேர்ந்து நசுங்கி இறந்து கிடந்தது பார்ப்பவர்கள் மனதில் ரத்தம்கசிய வைப்பதாக இருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X