சென்னையில் விபச்சார தொழிலில் 6,000 பேர்
சென்னை:
சென்னையில் 6,000 பேர் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மாதம் 3.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்என்றும் இந்திய சமுதாய நல மையம் (ICWO) அறிவித்துள்ளது.
இது குறித்து இந்த அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. அதில் கிடைத்த விவரங்கள்தலை சுற்ற வைக்கின்றன.
அதன் விவரம்:
சென்னையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை, மும்பை, டெல்லி, கொல்கத்தா நகரங்களை மிஞ்சும் அளவுபெருகி வருகிறது.
முன்பெல்லாம் விடுதிகள், ஹோட்டல்களில் விபச்சாரம் நடந்து வந்தது. ஆனால், இப்போது வீடுகள், கார்களிலும் விபச்சாரம்நடக்கிறது. பல குடும்பங்கள் வசிக்கும் இடத்திலேயே விபச்சாரம் நடக்கிறது. இந்தத் தொழிலில் மாதம் மூன்றரை கோடி ரூபாய்புரளுகிறது.
சென்னை செக்ஸ் தொழிலில் முக்கிய இடம் வகிப்பது செல்போன்கள். கஸ்டமர்கள் இதன் மூலம் தான் புரோக்கர்கள்,விலைமாதுகளைத் தொடர்பு கொள்கின்றனர்.
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 15% படித்த பட்டதாரிகள். சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்தத் தொழிலில்ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் குடும்ப கஷ்டம் காரணமாக வந்துள்ளனர். மேலும் பலர் தங்களையும் மீறி இந்தத்தொழிலில் தவறுதலாக நுழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய பயம் இருக்கிறது. அதனால் பெரும்பாலான பெண்கள் ஆணுறையின்றி யாரையும்அனுமதிப்பதில்லை. ஆனால், ரெகுலராக வருபவர்களிடம் வற்புறுத்துவதில்லை.
சென்னையில் இந்த தொழிலில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்












Click it and Unblock the Notifications